• Download mobile app
25 Jun 2025, WednesdayEdition - 3423
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி

June 24, 2025 தண்டோரா குழு

சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரை நினைவுகூரும் விதமாகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் செவ்வாய்க்கிழமை காந்திபார்க் பகுதியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

‘விண்ணுக்கு ஓர் கடிதம்’ என்ற கருவில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் விமான துறை சார்ந்த கல்வி கற்கும் 40 மாணவர்கள், ஹாப்ஸ் அகாடமியின் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சார்பில் 10 பேர் ஆகியோர் உடன் விமான பைலட்டுகள் சுமார் 10 பேர் சேர்ந்து விபத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் விதமாக தாங்கள் எழுதிய கடிதங்களை ஹீலியம் பலூன்களில் கட்டி வானத்தை நோக்கி அனுப்பினர்.

விமான விபத்தில் இறந்தவர்களை இந்திய மக்கள் அனைவரும் இழந்து வருந்துவதாகவும்,அவர்கள் அனைவரும் எப்போதும் இந்தியர்களின் இதயங்களில் நிலைத்திருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே நடந்த இந்த நிகழ்வில் அகாடமியின் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மறைந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது :-

ஜூன் 12 அன்று நடைபெற்ற அந்த சம்பவம் என்பது ஒரு பெரும் செய்தி என்பதை தாண்டி எங்கள் மேல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு.இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரும் அவர்களின் குடும்பத்தின் நம்பிக்கையும், கனவுமாக இருந்தவர்கள். நாங்கள் விமான துறையை சார்ந்தவர்களாக உள்ளதால், இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு மரியாதை செலுத்துவது எங்களின் கடமை என கருதுகிறோம்.

‘விண்ணுக்கு ஓர் கடிதம்’ எனும் இந்த நிகழ்வு மூலம், இறந்த அனைவரையும் நாங்கள் எங்கள் நினைவில் வைத்துள்ளோம் என்பதை வெளிப்படுத்த ஒரு வழியாக பார்க்கிறோம். 241 பேரின் உயிரிழப்புக்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்து, அவர்களுக்கு எங்கள் மரியாதையை சமர்ப்பித்து, இந்த துறையில் பாதுகாப்பை அதிகரிக்க உறுதியேற்போம் என கூறிக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க