• Download mobile app
23 Jun 2025, MondayEdition - 3421
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்

June 23, 2025 தண்டோரா குழு

ஜே.டி எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் டிப்ளமோ இன் டிஜிட்டல் பிலிம்மேக்கிங் அண்ட் வி.எஃப்.எக்ஸ் டிப்ளமோ பயிற்சிக்கான துவக்க விழா ஜூன் 23 அன்று, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.போன்ற திரைப்படங்களின் மூத்த வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் பீட் டிராப்பர் பேசுகையில்,

“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறினார்.கடந்த 2019 ஆம் ஆண்டு செயின்ட். ஜூட்ஸ் பப்ளிக் ஸ்கூலின் இயக்குநரான டாக்டர் சாம்ஜித் தனராஜனால் துவங்கப்பட்ட ஜே.டி எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனம், அகாடமிக் கல்வி மற்றும் தொழில்துறை இடையேயான இடைவெளியை நீக்கும் நோக்கில் செயல்படும் எதிர்காலத்தை நோக்கி உருவாக்கப்பட்ட மீடியா கல்வி நிறுவனமாகும்.இதுவரை கோவை நகரில் உள்ள ஜே.டி எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனத்தின் 3 மையங்களில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

ஜே.டி எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனம் தற்போது, பிரான்ஸின் புகழ்பெற்ற டிபிஐம்ஏ பாரிஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.இதன் மூலம் இன்டர்நேஷனல் டிப்ளமோ இன் டிஜிட்டல் பிலிம்மேக்கிங் அண்ட் வி.எஃப்.எக்ஸ் எனும் புதிய பன்னாட்டு டிப்ளமோ பயிற்சியை துவங்கியுள்ளது.

இந்நிலையில்,கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த டிப்ளமோ பயிற்சிக்கான துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். போன்ற திரைப்படங்களின் மூத்த வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் பீட் டிராப்பர், இந்த பயிற்சித் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில், டிஎன்இஜி நிறுவனத்தின் வி.எஃப்.எக்ஸ் துறைத் தலைவர் கார்த்திகேயன், உலக வடிவமைப்பு கவுன்சிலின் இந்தியத் தலைவர் மற்றும் அகாடெமி ஆஃப் மீடியா அண்ட் டிசைன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பிலிப் தாமஸ், டிபிஐம்ஏ இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) பேராசிரியர் ஜேசுராஜா,
ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகி மற்றும் செயலாளர் டாக்டர் பிரியா, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கௌரவ அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். போன்ற திரைப்படங்களின் மூத்த வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் பீட் டிராப்பர், தான் பணியாற்றிய திரைப்படங்கள் குறித்த அனுபவங்களை விளக்க படங்களுடன் எடுத்துரைத்தார். மேலும், நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவற்றை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.‌

ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்பவை என்றும் எனவே அதன் வரலாறு பற்றி முழுவதுமாக புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், டிபிஐம்ஏ இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஜான் பால் சுவாமிநாதன் மற்றும் அவரது குழுவினர் பாரிஸ் நகரத்திலிருந்து நேரலையில் மாணவர்கள் எதிர்பார்க்கக்கூடிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இரண்டு நிலை கொண்ட இந்த ஒரு வருட தொழில்முனைவு டிப்ளமா பயிற்சி, 8 மாதங்கள் இந்தியாவில் ஆழ்ந்த பயிற்சியும், 2026 பிப்ரவரி மாதத்தில் 1 மாதம் பாரிஸில் முழுநேர வசிப்புடன் கூடிய பயிற்சியும் வழங்குகிறது. இது மாணவர்களுக்கு உலகளாவிய அனுபவங்களையும் நடைமுறை திறன்களையும் வழங்குகிறது.

இந்த பயிற்சிக்கான பாடத்திட்டத்தில், மீடியா மேலாண்மை, எடிட்டிங், மோஷன் கிராபிக்ஸ், சவுண்ட் டிசைன், கலர் கிரேடிங், ஃபினிஷிங் என அனைத்தும், அடோப் பிரீமியர் ப்ரோ, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ், போட்டோஷாப், ஆடிஷன், டாவின்சி ரிசால்வ் போன்ற தொழில்துறை கருவிகளுடன் கற்பிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் இணைய குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், யூஜி அல்லது பிஜி முடித்திருந்தால் மேன்மையானது. ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்த பயிற்சிக்கான விண்ணப்பம் ஜூலை 15-ம் தேதியோடு முடிவடைகிறது.

மேலும், 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த டிப்ளமாவை முடித்த பிறகு, டிபிஐம்ஏ பாரிஸ்-இல் யூஜி இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். யூஜி முடித்த மாணவர்கள், இந்த டிப்ளமாவை முடித்த பிறகு, பிஜி இரண்டாம் ஆண்டில் சேர வாய்ப்பு உள்ளது.

இந்நிகழ்வின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.எஃப்.எக்ஸ் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவரும் டிஎன்இஜி நிறுவன வி.எஃப்.எக்ஸ் துறைத் தலைவருமான கார்த்திகேயன் கூறுகையில், “இந்த டிப்ளமோ பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நினைப்பதாக கூறினார். டிஜிட்டல் பிலிம்மேக்கிங்-க்கான தேவை தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருவதாகவும் வி.எஃப்.எக்ஸ்-க்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருவதாகவும் கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.

மேலும் படிக்க