• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்

May 26, 2025 தண்டோரா குழு

கடந்த 57 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 21 வருடங்களாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள் பெருமையுடன் கலந்து கொள்வார்கள்.இந்த வருடம் இப்போட்டிகள் 2025, மே 28 முதல் ஜுன் 1 – ந் தேதி வரை 5 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக துணைத் தலைவர்கள் பழனிச்சாமி, நவரத்தன் குமார் பாப்னா,செயலாளர் எஸ். பாலாஜி ஆகியோர் கூறியதாவது :-

கோவை மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில்,நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்துடன், கோவை மாநகராட்சி இணைந்து, சர்வதேச தரத்திலான செமி உள்விளையாட்டு அரங்கத்தை சென்ற வருடம் அமைத்தது.
மேலும்,ஆண்டுதோறும் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான போட்டிகள் இந்தாண்டு மே 28-ந் தேதி முதல் ஜூன்,1-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடக்கிறது.ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 8 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுளன.

இதில் ஆண்கள் பிரிவில் “சென்னை” – இந்தியன் வங்கி அணி, “சென்னை” – வருமானவரி அணி, “லோனாவாலா” – இந்திய கப்பல் படை அணி, “புது தில்லி” – இந்திய விமானப்படை அணி, “சென்னை” – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, “பெங்களூரு” – பாங்க் ஆஃப் பரோடா அணி, “திருவனந்தபுரம்” – கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும் “கோயம்புத்தூர்” – கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உட்பட 8 அணிகள் விளையாடுகின்றன.

பெண்கள் பிரிவில் “செக்கந்திராபாத்” – தென் மத்திய இரயில்வே அணி, “சென்னை” – தென்னக இரயில்வே அணி, “திருவனந்தபுரம்” – கேரளா மாநில மின்சார வாரிய அணி, “சென்னை” – வருமானவரி அணி, “ஹ{ப்ளி” – தென்மேற்கு இரயில்வே அணி, “திருவனந்தபுரம்” – கேரளா காவல் துறை அணி, “சென்னை” – ரைசிங் ஸ்டார் அணி மற்றும் “கோயம்புத்தூர்” – கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி உட்பட 8 அணிகள் விளையாடுகின்றன.ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், சிறப்பாக விளையாடும் வீரருக்கு சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதும் வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.75 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம்-மும், மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

இப்போட்டிகள் 2025 மே 28–ம் தேதி துவங்கும், இந்த போட்டிகள் மே 30 வரை சுழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் 31-ம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.மேலும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் ஜுன் 1 – ம் தேதி மாலை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.இந்த போட்டிகள் கோவை வ.உ.சி.பூங்கா மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கத்தில் தினமும் மாலை 4.00 மணிக்கு துவங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும். இப்போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

வரும் மே 28 –ம் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்கும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகளை கோவை பாராளுமன்ற உறுப்பினர்,கணபதி ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைக்கவுள்ளார்.மேலும் கௌரவ விருந்தினராக சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான “ஜி. செல்வராஜ்” அவர்கள் முன்னிலை வகிக்கின்றார்.

ஜுன் 1 – ம் தேதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மாலை 8.00 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்களான சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் மற்றும் அகில இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவா அர்ஜுனா ஆகியோர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின் போது கோவை மாவட்ட கூடைப்பந்து கழக இணை செயலாளர்கள் திபாலா,ராமகிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க