• Download mobile app
25 Apr 2026, SaturdayEdition - 3727
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேகாலயா ஆளுநர் சண்முகநாதனின் ராஜினாமா கடிதம் ஏற்பு

January 27, 2017 தண்டோரா குழு

மேகாலயா ஆளுநர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்து சண்முகநாதன் வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேகாலயா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மேகாலயா ஆளுநர் மாளிகையில் நேர்முகத் தேர்வுக்கு வந்த இளம்பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகச் சர்ச்சை கிளம்பியது.

இதனை அடுத்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி அலுவலகங்களுக்கு முன்னாள் மேகலாயா ஆளுநர் சண்முகநாதன் மீது ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அடுக்கடுக்கான புகார்களை அனுப்பி வைத்தனர்.

இந்த புகார்களைத் தொடர்ந்து வியாழக்கிழமை சண்முகநாதன் தனது ராஜிநாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜிநாமாவைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டார்.

மேலும் மேகாலயா ஆளுநர் பொறுப்பை அசாம் ஆளுநர் பன்வாரிலால் கூடுதலாகக் கவனிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க