• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடும் பனிப்பொழிவு மற்றும் உறைக்கும் குளிரால் 27 குழந்தைகள் பலி

January 27, 2017 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் கடும்குளிரால் 27 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“கடும் பனிப்பொழிவு மற்றும் உறைக்கும் குளிரால் 5 வயதுக்கு கீழ் உள்ள 27 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறோம்” என்றார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள வட ஜஸ்ஜன் மாகணத்தின் தர்ஜாப் என்னும் இடத்தில் உள்ள சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன. சாலைகளின் மீது 50 செ.மீ. உயரத்திற்கு பனி படிந்துள்ளது. இதனால், அதனை சுற்றயுள்ள கிராமங்களில் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அளவு மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுமையாகக் குறைந்துவிட்டது.

மாவட்ட ஆளுநர் ரஹ்மத்துல்லாஹ் ஹஸர் கூறுகையில்,

“கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாகத் தொடரும் மரணங்கள் அதிக வேதனையை தருகிறது. இந்த கடும் பனிப்பொழிவால் 5 வயதுக்கு கீழ் உள்ள 27 குழந்தைகள் உயிரிழந்தனர்.

ஜஸ்ஜன் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர், ரீஸா கஃபூரி கூறுகையில், “அவசர கால குழு மூலம் அணைத்து உதவிகளும் வழக்கப்படும்” என்றார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஒவ்வொரு பனிக்காலத்தின் போது, கடும் பனிப்பொழிவும், பனிச்சரிவும் ஏற்படுவதால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த 2௦15ம் ஆண்டு வட காபூலில் உள்ள பஞ்ச்ஷிர் மாகணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 3௦௦ பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க