• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மது அருந்த பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

January 5, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் அருகே மது அருந்த பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூலூர் அருகே உள்ள அரசூர் பல்லவாநகரைச் சேர்ந்த நாகராஜ் (52) என்பவர்,மது அடிமை.நேற்று முன்தினம், மது அருந்த பணம் கேட்டபோது மனைவி சுவேதா (38) மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில், கோபம் அடைந்த நாகராஜ், சுவேதாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியால் சுவேதாவின் இடது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுவேதா, அலறித் துடித்தார்.

சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த சுவேதாவை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுவேதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், நாகராஜை கைது செய்து, அவரிடமிருந்து கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்தனர்.மது அடிமை கணவரின் கொடூர செயலால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க