• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீட்டாவுக்கு எதிராக வழக்கு

January 24, 2017 தண்டோரா குழு

பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடங்கியதிலிருந்தே, ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தமிழகத்தில் பீட்டா அமைப்பினைத் தடை செய்ய வேண்டும் என்று சூரியப்பிரகாசம் என்ற வழக்குரைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதி வழக்காகத் தொடர்ந்தால் புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பீட்டா அமைப்பைச் சேர்ந்த ராதா ராஜன், மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிராகப் பேசி வருவதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் சூரியப் பிரகாசம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க