• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சி செய்கிறது

January 24, 2017 தண்டோரா குழு

பிரபலமான போராட்டங்கள் நடைபெறும் போது அங்கே சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சி செய்கின்றன என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் “டுவிட்டர்” பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;

“ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்தப் பிரச்சினையானது அங்கு அமைப்பு மற்றும் தலைமை இல்லாததால் நடைபெற்றுள்ளது. தலைமை இல்லாததன் விளைவு போராட்டத்தில் சிலரிடம் ஒழுக்கமில்லை, வெவ்வேறு தரப்பு மக்கள் பல்வேறு திசைகளை நோக்கி போராட்டத்தை இழுத்து செல்கிறார்கள்.

சில விஷயங்களில் ஒருதரப்பு மக்கள் ஒத்துக்கொண்டால், மற்றவர்கள் உடனடியாக நிராகரிக்கிறார்கள். எப்போது எல்லாம் பிரபலமான போராட்டங்கள் நடைபெறுகிறதோ, அப்போது எல்லாம் அங்கே சமூக விரோத சக்திகள் ஊடுருவ முயற்சி செய்கின்றன. அந்த சக்திகள் கெடுதலை ஏற்படுத்தவும் சில விஷமங்களைச் செய்கின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இப்போது நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்கும் போது மிகவும் வருத்தம் அடைகிறேன்.”

இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.

மேலும் படிக்க