• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு 15 பேர் பலி 3௦ பேர் காயம்

January 21, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தான் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள காய்கறிச் சந்தையில் சனிக்கிழமை (ஜனவரி 21) திடீரென்று குண்டு வெடித்தது. அதில் 15 பேர் உயிரிழந்தனர் 3௦ படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் குர்ரம் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு காய்கறிச் சந்தையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. காய்கறிகள் வைக்கும் இடத்தில் ஒரு பெட்டிக்குள் சக்தி வாய்ந்த குண்டுகளை தீவிரவாதிகள் பதுக்கி வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் அங்கேயே உயிரிழந்தனர். 3௦ படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த 3௦ பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அப்பகுதியைப் பாதுகாப்புப் படை சூழ்ந்துள்ளது. இந்த பயங்கரவாதச் செயலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் பிடிபடுவர். இந்தத் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவுயிடுள்ளேன்.

இவ்வாறு பாதுகாப்பு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க