• Download mobile app
29 May 2026, FridayEdition - 3761
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழர்களை தமிழிலேயே வாழ்த்தி தெறிக்கவிட்ட சேவக்!

January 21, 2017 tamilsamayam.com

ஜல்லிக்கட்டுக்கு அமைதியான முறையில் போராடிய தமிழர்களை தமிழிலேயே முன்னாள் அதிரடிவீரர் சேவக் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் சேவக். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் தனது டுவிட்டர் மூலம் சமூகத்தில் மக்கள் மத்தியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முன்பே ஆதரவு தெரிவித்த சேவக், தற்போது தனக்கும் தமிழ் மீது உள்ள காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் அமைதியான முறையில் போராடிய தமிழர்களுக்கு தமிழிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில், “அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன்”. அமைதியை தொடருங்கள். அன்புடன் “#Jallikattu” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க