• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் மினி பஸ் சேவை மீண்டும் தொடங்க வேண்டும்

August 30, 2023 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் மினி பஸ் சேவை மீண்டும் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை பந்தய சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அலுவலகத்தில் தமிழகம் முழுவதும் மினி பஸ் சேவை மீண்டும் முழு அளவில் இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி,

1999-ம் திமுக ஆட்சியில் மினி பஸ் பேருந்து இயக்கப்பட்டது. அதன் பிறகு 2006-ம் ஆண்டு மற்றும் தற்போது ஆட்சியிலும் மினி பஸ் பயன்பாடு முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற விவசாயிகளுக்கும் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பொருட்களை நகர்ப்புறங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் போகிறது என்று குற்றம் சாட்டினார்.

கிராமப்புறங்களில் இருந்து நகர்த்துக்கு மையப் பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்கினால் மட்டுமே விவசாயிகளும் கிராமப்புற மக்களும் நன்மை அடைவார்கள் என்று கூறினார்.மினி பஸ் முடக்கத்தால் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக மினி பஸ் சேவை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மினி பஸ் இயக்கப்படாததால் பஸ்-சில் கோழி,ஆடு மற்றும் விவசாயிகள் அடைத்து வைக்கும் Godown-னாக மாறிவிட்டது என வர்த்தம் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் 6000 மினிபஸ்கள் ஓடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது வெறும் குறைவான அளவில் மினிபஸ்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை காத்திட உடனடியாக மினி பஸ் சேவையை தொடங்க வேண்டும் எனவும் தேர்தல் வாக்குறுதி 426 உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க