• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா, எம்ஜிஆர் மார்க்கெட்டுகளை ஜீவா நகர் அருகே மாற்ற கலெக்டர் ஆய்வு

May 5, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.புரம் அருகே திவான்பகதூர் சாலையில் ரூ.40.78 கோடி மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் 49 நான்கு சக்கர வாகனங்கள், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் தளங்களில் தலா 81 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 373 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தலாம். பார்வையாளர்கள் அறை, மின்மாற்றி அறைகள், மின்சாதன கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர்கள் ஓய்வு அறை, கழிப்பிடங்கள், வாகன பராமரிப்பு அறை ஆகியவை உள்ளன. இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அண்ணா நகர் மார்க்கெட் மற்றும் எம்ஜிஆர் மார்க்கெட் ஆகிய இரண்டையும் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் அருகே 6 ஏக்கர் நிலப்பரப்பில் மாற்றுவது தொடர்பாகவும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து புல்லுக்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சில்லரை மீன் விற்பனை அங்காடியையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாநகராட்சி துணை கமிஷனர்கள் ஷர்மிளா, சிவகுமார், உதவி கமிஷனர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க