• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைப்புதூர் அறிவொளி நகரில் இலவச நடமாடும் மருத்துவ சேவை துவக்கம்

May 3, 2023 தண்டோரா குழு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரக் கிளையின் கீழ் இயங்கி வரும் இலவச நடமாடும் மருத்துவ சேவை திட்டம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நகரின் போக்குவரத்து வசதியற்ற புறநகர கிராமப் பகுதிகளில், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று முதியோர்கள், பெண்கள் & குழந்தைகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனையுடன் மருந்துகளை வழங்கியும் சேவையாற்றி வருகிறது.

இந்த நடமாடும் மருத்துவ ஊர்தி திட்டத்தின் துவக்க விழா – கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியிலுள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த சேவையினை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு கோவை பெருநகரத் தலைவர் P.S. உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் நிகழ்வை ஒருங்கிணைத்தார். கோவை தெற்கு கிளையின் செயலாளர் முஹம்மது ஹக்கீம், முஹம்மது பஷீர், பஷீர், அபுதாஹிர் மற்றும் அப்துல் ஹாலிக் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

காலை முதலே காத்திருந்த பகுதி மக்கள் திரளானோர் தங்களுக்கான மருத்துவ சிகிச்சையினை பெற்றுச்சென்றனர்.

மேலும் படிக்க