• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொள்ளையடித்தவனுக்கு 7ஆண்டு சிறை, ரூ. 5000 அபராதம் விதிப்பு

January 24, 2023

கொள்ளையடித்த நபருக்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஹக்கிம் என்ற டோரி ஹக்கிம்(35) மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று ஹக்கிம் என்ற டோரிஹக்கிம்-க்கு 7ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் ஆகியவர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

மேலும் படிக்க