• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

January 4, 2017 தண்டோரா குழு

பிஜி தீவில் 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் புதன்கிழமை(ஜனவரி 4) ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பிஜி நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள நாடி என்னும் நகரிலிருந்து 227 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல்பகுதியில் 1௦ கிலோமீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரத்தின்படி காலை 1௦ மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7.2 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. உடனே, சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

பிஜி நாட்டின் சுற்றுலா நகரமான நாடி சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாகும். நில நடுக்கத்தை அடுத்து, அங்கிருந்து சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க