• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொண்டையம்பாளையம் நாற்றாங்கால் பண்ணையில் ஆட்சியர் ஆய்வு

July 29, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சர்க்கார்சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சியர் மீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கொண்டையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி மணிமண்டபம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.78 லட்சம் மதிப்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நாற்றங்கால் பண்ணையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சமீரன் அங்கு வளர்க்கப்பட்டுள்ள மர வகைகளின் விவரங்கள், எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து அருகில் உள்ள ஒஎஸ்ஆர் இடத்தில் சப்போட்டா மரம், பாக்கு மரம், பூவரசு மரம் உள்ளிட்ட பலவகையான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை அவர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம்,பேரூராட்சி அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பதிவேடு, நிலம் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்து அனைத்து விதமான பதிவேடுகளை முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் எஸ்.எஸ்.குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள், சாலைப்பணிகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது சர்க்கார் சாமக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, அனிதா, ஒன்றிய பொறியாளர் சந்திரகலா, மண்டல துணை வட்டார அலுவலர் அம்மு உட்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க