• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

May 31, 2022 தண்டோரா குழு

பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

இப்பேரணிக்கு தலைமை தாங்கி மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அருணா முன்னிலை வகித்தார்.மேலும் திட்ட அலுவலர் விஜயகுமார்,புகையிலைக் கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் சரண்யா தேவி, சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன், உளவியலாளர் தௌபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி பந்தய சாலை துணை இயக்குநர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மேலும் படிக்க