• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிலிப்பின்ஸ் குண்டு வெடிப்புகளில் 39 காயம்

December 30, 2016 தண்டோரா குழு

பிலிப்பின்ஸ் நாட்டில் இரண்டு வெவ்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 39 காயமடைந்தனர்.

இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (டிசம்பர் 29) கூறியதாவது:

பிலிப்பின்ஸ் நாட்டின் மத்திய தீவான லேய்டேவில் உள்ள ஹிலோங்கோஸ் நகரில் குத்துச் சண்டை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அந்த அரங்கில் முதல் வெடிகுண்டு வெடித்தது. அதில் 33 பேர் காயமடைந்தனர்.

முதல் வெடிகுண்டு வெடித்து, சரியாக ஒரு மணிநேரத்தில் பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானோ என்னும் தீவில் நெடுஞ்சாலையில் இரண்டாவது வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்.

மேலும், தெற்கு மணிலாவில் இருந்து 62௦ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு நகரில் வெடிக்கப்படாத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வெடிகுண்டுச் சம்பவங்களுக்கு மதத் தீவிரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டேவின் சொந்த ஊரான டாவோ அமைந்துள்ள மின்டானோ மாகாணத்தில் பயங்கரவாதிகள் செப்டம்பர் மாதத்தில் நடத்திய தாக்குதலில் 15 உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க