• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்படும் – ரவிசங்கர் பிரசாத்

December 30, 2016 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புது தில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

பிரதமர் நரேந்திர மோடி மீதும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீதும், அடிப்படை ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இது போன்ற பொய்ப் புகார்களைக் கூறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொய்ப் புகார் கூறியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

பழைய ரூபாய் 500, 1000 வாபஸ் நடவடிக்கைக்குப் பின் நடைபெற்ற உள்ளாட்சிகள் மற்றும் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி, அதிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மேலும் படிக்க