• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 லட்சம் மதிப்பில் 3.43 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கல்

May 16, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்’ திட்டத்தின்கீழ் 3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 43 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இத்திட்டத்தின்கீழ் தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலைவேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழக அரசு வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இம்மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களின் வரப்புகளிலோ அல்லது குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலோ நடவுசெய்யலாம். நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலிவாயிலாக அருகிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.கோவை மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு காரமடை வட்டாரத்தில் 26 ஆயிரத்து 427 மரக்கன்றுகள் ரூ.3.96 லட்சம் மதிப்பிலும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 56 ஆயிரத்து 133 மரக்கன்றுகள் ரூ.8.42 லட்சம் மதிப்பிலும், மதுக்கரை வட்டாரத்தில் 15 ஆயிரத்து 659 மரக்கன்றுகள் ரூ.2.35 லட்சம் மதிப்பிலும், பொள்ளாட்சி (வடக்கு) வட்டாரத்தில் 34 ஆயிரத்து 300 மரக்கன்றுகள் ரூ.5.14 லட்சம் மதிப்பிலும், பொள்ளாட்சி (தெற்கு) வட்டாரத்தில் 20 ஆயிரத்து 580 மரக்கன்றுகள் ரூ.3.08 லட்சம் மதிப்பிலும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 17 ஆயிரத்து 650 மரக்கன்றுகள் ரூ.2.65 லட்சம் மதிப்பிலும், சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் 16 ஆயிரத்து 650 மரக்கன்றுகள் ரூ.2.50 லட்சம் மதிப்பிலும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 28 ஆயிரத்து 740 மரக்கன்றுகள் ரூ.4.31 லட்சம் மதிப்பிலும், சூலூர் வட்டாரத்தில் 20 ஆயிரத்து 580 மரக்கன்றுகள் ரூ.3.08 லட்சம் மதிப்பிலும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 27 ஆயிரத்து 440 மரக்கன்றுகள் ரூ.4.11 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 3430 விவசாயிகளுக்கு ரூ.51.45 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 43 ஆயிரம் மரக்கன்றுகள் இத்திட்டத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க