• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மீது தாக்குதல் முயற்சி

April 11, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் அதிமுக உறுப்பினர்களான சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தமிழக அரசின் சொத்து வரி உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டம் நடைபெறும் விக்டோரியா ஹால் முன்பு, மூவரும் மாநகராட்சியின் 100 சதவீத வரி உயர்வுக்கு எதிராக கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொது சுகாதாரப்பணிகள் குறித்து பேசிய திமுக உறுப்பினர்கள் கடந்த ஆட்சியை குறித்து விமர்சித்தனர்.

அப்போது குறுக்கிட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்,திமுக வரி விதிப்பு குறித்து பேசினார்.கடுமையான வரி விதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே அதிகப்படியான வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய போது திமுக கவுன்சிலர்கள் சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் சில உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினரை திடீரென தள்ளி விட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாமன்ற அதிமுக குழு தலைவர் பிரபாகரன்,

கோவை மாநகராட்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு 100 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளதாகவும் அதனை தட்டி கேட்ட அதிமுக உறுப்பினர்களை தாக்க முற்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை போல் மக்களை மிரட்டி வரி வசூல் செய்கின்றனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் 350 கோடி ரூபாய் வரி வசூல் செய்துவிட்டு தற்போது நிதி இல்லை என கூறினால் வசூலித்த நிதி என்னவாயிற்று?. 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே அதிமுக என்பதால் தங்களை அடக்கி ஒடுக்க திமுக உறுப்பினர்கள் முயல்கின்றனர். ஆனால் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க