• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் – தமன்னா

December 26, 2016 தண்டோரா குழு

“கத்தி சண்டை” படத்தின் இயக்குநர் சுராஜ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “நடிகைகள் காசு வாங்கினால் ஆடைகளைக் குறைத்துக் கொண்டுதான் நடிக்கவேண்டும்” என கூறியிருந்தார்.

இயக்குநர் சுராஜ் கூறிய இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை நயன்தாரா ஆவேசமாக ஒரு பதிலை அறிக்கை வாயிலாக வெளியிட்டு, “அதில் நாங்கள் ஒன்றும் விபசாரிகள் இல்லை” என்று கோபமாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நயன்தாராவைத் தொடர்ந்து தற்போது நடிகை தமன்னாவும் சுராஜுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நடித்த கத்தி சண்டை பட இயக்குநர் சுராஜ் கூறிய கருத்துகளால் வேதனையும், கோபமும் அடைந்துள்ளேன். இதற்காக அவர் என்னிடம் மட்டுமல்ல சினிமாவில் இருக்கும் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகைகளைக் காட்சிப் பொருட்களாகச் சித்திரிக்கக் கூடாது. நான் கடந்த 11 ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு வசதியான ஆடைகளைத்தான் அணிந்து வருகிறேன். ஒரு தனி நபர் கூறிய இது போன்று கருத்துக்காக ஒட்டுமொத்த திரைத் துறையையும் பற்றி மக்கள் தவறாக நினைத்துவிடக் கூடாது” என்று தமன்னா கூறியுள்ளார்.

நடிகைகள் குறித்து இயக்குநர் சுராஜ் கூறிய கருத்துகளுக்கு தற்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க