• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அலங்கார அணிவகுப்பு

March 8, 2022 தண்டோரா குழு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் தனியார் விடுதி சார்பில் நடத்தப்பட்ட இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அலங்கார அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வரும் நிலையில் பெண்கள் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பங்கேற்ற அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வண்ண வண்ண உடை அணிந்த இளம் பெண்கள் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.கவர்ச்சி உடையிலும் பாரம்பரிய உடையிலும் தோன்றிய இளம் பெண்களின் அணிவகுப்பு அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதேபோல் இளம் பெண்களுக்கு நிகராக சிறுமிகளும் ஒய்யாரமாக நடந்து தங்களின் மழலை கலந்த செய்கையால் பார்வையாளர்களின் கைதட்டல்களை பெற்றனர். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் மாடல் அழகிகள் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

பெண்கள் அச்சமின்றி சமூகத்தில் செயலாற்ற வேண்டும் என்றும் மனதில் உள்ள தயக்கம் என்பதை அவர்கள் போக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க