• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மைதானத்துக்கள் விளையாடிய தேனீக்கள்!

February 6, 2017 tamilsamayam.com

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில், மைதானத்துக்குள் தேனீக்கூட்டம் புகுந்தது.

தென் ஆப்ரிக்கா சென்ற இலங்கை அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், தென் ஆப்ரிக்க அணி, 2-0 என முன்னிலை வகித்தது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி ஜோகானஸ்பர்க்கில் நடந்தது. இப்போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி, வென்றது . ஆனால் இப்போட்டியின் போது இலங்கை அணி, முதலில் ‘பேட்டிங்’ செய்த போது, மைதானத்துகுள் திடீரென தேனீக்கள் கூட்டம் படை எடுத்தது.

இதனால் போட்டி இரண்டு முறை தாமதமானது. முதலில் 25வது ஓவரில் மைதானத்துக்குள் தேனீக்கூட்டம் புகுந்தது. அப்போது சிலிப் பீல்டர்கள் மைதானத்தில் அப்படியே படுத்தனர். பின் சிறிது நேரத்துக்கு பின், போட்டி துவங்கியது. பின் 27வது ஓவரில் மீண்டும் மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் நுழைந்தது.

இதனால் போட்டியை அம்பயர்கள் சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாக நிறுத்திவைத்தனர். பின் பணியாளர்கள் வந்து தேனீக்களை மருந்து அடித்து விரட்டினர். இதனால் போட்டி ஒரு மணிநேர தாமதத்துக்கு பின் மீண்டும் துவங்கியது.

மேலும் படிக்க