• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பல்லாயிரம் கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொன்ன சச்சின்!

February 14, 2017 tamilsamayam.com

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பல்லாயிரம் கேள்விக்கு ஒரே வரியில் பதில் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைப்பயணத்தை படமாக எடுப்பது தான் தற்போது பாலிவுட் டிரெண்டாக உள்ளது. இதில் இந்தியாவின் வெற்றிக்கேப்டனாக ஜொலித்த தோனியின் வாழ்க்கைப்பயணம் படமாக எடுக்கப்பட்டு பட்டையை கிளப்பியது.

அவரை தொடர்ந்து முன்னாள் கேப்டன் அசாருதின் படம் வெளியானது. அதேபோல் கேன்சரில் இருந்து மீண்டு கிரிக்கெட் களத்துக்கு திரும்பிய யுவராஜ் சிங்கின் கதையும் விரைவில் படமாகவுள்ள நிலையில், ஒட்டு மொத்த இந்தியாவை மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சச்சின், குறித்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த படம் வெளியாகும் தேதியை சச்சினே இன்று தெரிவித்துள்ளார். இந்த படம் வரும் மே 26, 2017ல் வெளியாகும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஒவ்வொருவரும் இது வரை என்னிடம் கேட்ட கேள்விக்கு தற்போது விடை தெரிந்துள்ளது. இந்த தேதியை உங்கள் காலண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்,’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க