ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் அஷ்வின், முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை தகர்த்தெறிந்தார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புனேயில் இன்று துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில், 9 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, மேலும் ஒரு பவுண்டரி சேர்த்த நிலையில் ஸ்டார்க் (61) அஷ்வின் சுழலில் சிக்கினார்.
புதிய சாதனை:
இதன் மூலம் இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்டில் அஷ்வின் மொத்தமாக 64 (நியூசிலாந்து 27 + இங்கிலாந்து 28 +வங்கதேசம் 6 + ஆஸ்திரேலியா 3) விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் கபில் தேவின் 37 ஆண்டு கால சாதனையை அஷ்வின் தகர்த்தெறிந்தார்.
கடந்த 1979-80ல் இந்தியாவில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மொத்தமாக 63 விக்கெட் கைப்பற்றியதே, ஒரு சீசனில் அதிகவிக்கெட் பவுலருக்கான சாதனையாக இருந்தது. அதை அஷ்வின் தற்போது முறியடித்துள்ளார். தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ள நிலையில் அஷ்வினின் விக்கெட் வேட்டை தொடரலாம்.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு