January 28, 2017 tamilsamayam.com
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இத்தொடரை 4-1 என பாகிஸ்தான் அணி இழந்தது.
இதன் கடைசி போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமும், ஒரு போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.
அணியின் மற்ற வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தோல்வி எதிரொலி காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலக அசார் அலி யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.