• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தல’ தோனியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!

April 4, 2017 tamilsamayam.com

முன்னாள் இந்திய கேப்டன் ‘தல’ தோனியின் நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பை (டி-20, 50 ஓவர், மினி உலகக் கோப்பை) வென்று காட்டிய ஒரே கேப்டன் உட்பட ஏகப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த தோனி, தனது கேப்டன் பொறுப்புக்களில் இருந்து விலகி, சாதாரண வீரராக கோலி தலைமையில் விளையாடி வருகிறார். 35 வயதான தோனி, விரைவில் கிரிக்கெட் வாழ்க்கை ஓய்வுக்கு வரும் நிலையில் எல்லா விதத்திலும் தனது எதிர்கால வாழ்க்கைக்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் அவரது பங்குதாரரான ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் தலைவர் அருண் பாண்டே தோனியின் மிக நெருங்கிய நண்பர். இவர் ‘தல’ தோனியின் நீண்டநாள் கனவாக இருந்த கனவை நிறைவேற்றியுள்ளார்.

கடந்த 2011 முதல் கல்ப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ளார் தோனி. இந்நிலையில் இந்நிறுவனத்தின் ஒருநாள் சி.இ.ஓ.,வாக தோனி வேலை செய்துள்ளார்.

இதுகுறித்து அருண் பாண்டே கூறுகையில்,

“தோனி, கல்ப் ஆயில் இந்தியா நிறுவனத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளார். அவர் நீண்ட நாட்களாக ஒரு கார்ப்ரேட் நிறுவனம் எப்படி இயங்குகிறது என்பதை காண ஆசையாக இருந்தார்.

அதனால் அவர் ஒருநாள் சி.இ.ஓ.,வாக வேலை செய்தார். அந்த ஒருநாளில் உண்மையான சி.இ.ஓ.,வாகவே மாறிய தோனி, மிகப்பெரிய முடிவுகளை சர்வசாதரணமாக எடுத்தார். என்றார்.

மேலும் படிக்க