• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈரானில் ’டூப்ளிகேட்’ மெஸ்சி : கைது செய்த போலீஸ்!

May 10, 2017 tamilsamayam.com

ஈரானில் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி போலவே உருவம் கொண்ட ஒருவர் உலா வருகிறார்.

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி,29. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வழங்கும் சிறந்து கால்பந்து வீரருக்கான விருதை நான்கு முறை வென்று அசத்தியவர். தவிர கால்பந்து அரங்கில் பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரர்.

உலக முழுதும் ரசிகர் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். ஈரானின் மாணவரான ரீசா பராதீஸ், அச்சு அசல் மெஸ்சியின் ஜெராக்ஸாக உள்ளார். சமீபத்தில் மெஸ்சியைப்பற்றி செய்தி வெளியிட்ட போது உண்மையான மெஸ்சியின் படத்துக்கு பதிலாக பராதீஸ் படத்தை வெளியிட்டது. அந்த அளவு அப்படியே மெஸ்சியைப்போலவே உள்ள இவருக்கு அதுவே வினையாக அமைந்தது.

இவர் மெஸ்சியைப்போலவே உள்ளதால், பலரும் இவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தவிர, இவர் ஈரான் வீதிகளில் நடந்து சென்றால், இவரை பொது மக்கள் சுற்றி வளைத்துக் கொள்கின்றனர். இதனால் வீதிகளில் அதிக டிராபிக் ஏற்படுவதாக, அந்நாட்டு போலீசார் பலமுறை இவரை எச்சரித்துள்ளனர். ஆனால் இவர், அவர்களை கண்டுகொள்வதாக இல்லை. அதனால் பராதீஸை போலீசார் கைது செய்து கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். மெஸ்சியின் தீவிர ரசிகர்களில் பராதீசும் ஒருவர்.

மேலும் படிக்க