• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிக சிக்ஸர் அடித்ததில் சச்சினை முந்திய ரோஹித் சர்மா !

October 29, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 5 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.இதில் இந்தியா ஒரு போட்டியிலும் மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வென்றுள்ளது.ஒரு ஆட்டம் டிராவில் முடித்துள்ளது.இந்நிலையில்,நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்த இந்திய அணி தவானை 38 ரன்களுக்கும், கோலியை 16 ரன்களுக்கும் இழந்தது.

அதன் பின் ஜோடி சேர்ந்த ரோஹித் அம்பாதி ராயுடுவும் இணைந்து அதிரடியாக ஆடி அணியை சிறப்பான ஸ்கோருக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.இதில் ரோஹித் சர்மா 162 ரன்களில் ஆட்டமிழந்தார்.சர்மா 121 ரன்கள் எடுத்திருந்த போது 40-வது ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு விளாசினார்.இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில்,சச்சினை ரோஹித் சர்மா முந்தினார்.சச்சின் 195 சிக்ஸர்கள் அடித்திருந்தார். ரோஹித் சர்மா தற்போது 196* சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனி 218 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.சர்வதேச பட்டியலில் பாகிஸ்தானின் ஷகித் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.தோனி நான்காவது இடத்திலும்,ரோஹித் சர்மா ஏழாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க