• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழனுக்கு தன்நம்பிக்கை, தைரியம் அதிகம்: தினேஷ் கார்த்திக்!

March 21, 2017 tamilsamayam.com

இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்குவேன் என தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய ஹசாரே டிராபி தொடரில், தமிழக அணி, 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன் ஃபைனலில் தினேஷ் கார்த்திக் சதம் அடித்து அசத்தினார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,

விஜய் ஹசாரே டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது அவ்வளவு எளிதாக இல்லை. கேப்டன் விஜய் சங்கர் உட்பட 49 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தோம். அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது. இந்திய அணிக்காக விளையாடுவது எனது வாழ்நாள் கனவு, ஒரு சில தவறால் எனது இடத்தை பறிகொடுத்துவிட்டேன். இருந்தாலும் எனக்கு தன்நம்பிக்கையும், தைரியமும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எப்படியும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன்,’ என்றார்.

மேலும் படிக்க