• Download mobile app
17 Dec 2025, WednesdayEdition - 3598
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லாகோஸ் பேட்மின்டன்: மானு – சுமீத் இணைக்கு சாம்பியன் பட்டம்

August 1, 2017 tamilsamayam.com

லாகோஸ் சர்வதேச பேட்மின்டன் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி மற்றும் மானு அட்ரி இணை சாம்பியன் பட்டம் வென்றது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் சர்வதேச சேலஞ்ச் பேட்மின்டன் தொடர் நடந்தது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுமித் ரெட்டி மற்றும் மானு அட்ரி இணை 21–13, 21–15 என்ற நேர் செட் கணக்கில் நைஜீரியாவின் குட்வின் மற்றும் ஜுவோன் இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ராகுல் யாதவ் 21–15, 21–13 என்ற நேர் செட் கணக்கில் சக இந்திய வீரர் கரண் ராஜனை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மக்தோ அக்ரே 12–21, 14–21 என்ற செட்களில் இலங்கையின் திலினி பிரமோடிகாவிடம் கோப்பையை இழந்து இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

மேலும் படிக்க