• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜஸ்தான் அணியை சமாளிக்குமா பஞ்சாப் அணி !

March 25, 2019 தண்டோரா குழு

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்த 12வது ஐபிஎல் தொடர் கடந்த 23ம் தேதி சென்னையில் துவங்கியது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இத்தொடரின் 4-வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இதில், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. ஐ.பி.எல் தொடரில் இரு அணிகளும் மொத்தம் 17 முறை மோதியுள்ளன. அதில், ராஜஸ்தான் அணி 10 முறையும், பஞ்சாப் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் 5 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சீசனில் பஞ்சாப் அணியில் வருண் சக்கரவர்த்தி, சாம் கரன் மற்றும் நிகோலஸ் பூரான் உள்ளிட்ட அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் உள்ளனர். அதைபோல் ராஜஸ்தான் அணியில் கடந்த சீசனில் 500 ரன்களுக்கு மேல் குவித்த முக்கிய வீரராக ஜோஸ் பட்லர் இருக்கிறார். அதேபோல், தடையில் இருந்து மீண்டு வந்த ஸ்மித் அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க