• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பவுலிங்கில் சொதப்பிய இந்திய பெண்கள் : அரையிறுதியில் ஆஸி

July 13, 2017 tamilsamayam.com

இந்திய அணிக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பை லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பிரிஸ்டலில் இன்று நடக்கும் 23வது லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் மிதாலி ராஜ், 34 ரன்கள் எடுத்த போது, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸை (5992 ரன்கள்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். இவர் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதன் பின் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த துவக்க வீராங்கனை பூனம் ராத் (106) சதம் அடித்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு, போல்டன் (36), கார்ட்னர் (45) நல்ல அடித்தளம் கொடுத்தனர். இதன் பின் வந்த லேன்னிங், பெர்ரி ஆகியோர் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை பதம்பார்த்தனர். இருவரும் அரைசதம் கடந்து அசத்த, ஆஸ்திரேலிய அணி, 45.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மேலும் படிக்க