• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்கேரிய ஓபன்: பட்டம் வென்று அசத்திய குட்டிப் பையன் லக்சயா

August 19, 2017 tamilsamayam.com

பல்கேரிய ஓபன் பேட்மின்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இளம் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

பல்கேரிய நாட்டில் உள்ள சோபியா நகரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் இலங்கையின் டினுகா கருணாரத்னாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.

புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் கோப்பை வெல்லும் உறுதியுடன் களமிறங்கிய லக்சயா சென், குரோஷியாவின் ஜோனிமிர் டர்கின்ஜாக்கை எதிர்த்து விளையாடினார்.

இப்போட்டியில் முதல் செட்டை 18–21 என போராடி தவறவிட்ட லக்சயா சென் அடுத்தடுத்த செட்களில் உத்வேகத்துடன் விளையாடினார். 2வது செட்டை 21–12 எனக் எளிதாக கைப்பற்றிய அவர், 3வது செட்டையும் 21–17 என வென்று ரசிகர்களை அசத்தினார்.

இவ்வாறு 18–21, 21–12, 21–17 என்ற கணக்கில் ஜோனிமிரை வீழ்த்திய லக்சயா சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.

மேலும் படிக்க