• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூசிலாந்து மண்ணிலேயே பழி தீர்த்துக் கொண்டது இந்திய அணி!

January 29, 2020 தண்டோரா குழு

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கிடையேயான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல். ராகுல் களமிறங்கினர். முதல் 2 போட்டிகளில் சோபிக்காத ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோகித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய நியுசிலாந்து அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் சார்பில் அதிக பட்சமாக கேப்டன் கேன் வில்லியம்ஸன் 95 ரன்கள் குவித்தார். எனினும் நியுசிலாந்து அணிக்கு 19வது ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது சமியின் அபார பந்து வீச்சால் போட்டி சமனில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து சூப்பர் ஓவரில் நியுசிலாந்து அணி 17 ரன்கள் அடித்தது.

18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது இந்திய அணி முதல் இரண்டு பந்துகளில் 3 ரன்கள் மட்டும் எடுத்தது. பின்னர் ராகுல் ஒரு பவுண்டரி அடித்தார். அதன் பின்னர் ரோஹித் சர்மா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இந்தியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி2௦ தொடரை 3-0கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி நியூசிலாந்து மண்ணிலேயே பழி தீர்த்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க