• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனி இல்லாததது எங்களுக்கு சாதகமாக அமைந்தது – ரோஹித் சர்மா

April 27, 2019 தண்டோரா குழு

தோனி இல்லாததது எங்களுக்கு சாதகமாக அமைந்தது என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் காய்ச்சல் காரணமாக நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் கேப்டன் தோனி ஆடவில்லை.

முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை, 17.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டியை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தொடரில் சென்னை மும்பை மோதிய இரண்டு போட்டிகளிலும் சென்னை தோல்வியுற்றது.

இது குறித்து கூறிய மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா,

டாஸ் தோற்றதும் நன்மையாக அமைந்தது. பேட்டிங்கோ, பெளலிங்கோ சிறப்பான கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பதுதான் நோக்கம். அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி தேடிதந்தனர்.’தோனி இல்லாததது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அவரது தேவை அணிக்கு மிகவும் அவசியமானது. குறிப்பாக சேஸிங்கின் போது அவர் இல்லையெனில் அது மிகவும் கடினமானதாக அந்த அணிக்குய் மாறிவிடும்” என்றார்..

சுரேஷ் ரெய்னா கூறுகையில்,

“156 என்பது பெரிய இலக்கு அல்ல. ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தோம். பேட்டிங் இன்னும் பொறுப்பானதாக இருந்திருக்க வேண்டும். 3 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்ததும் பின்னடைவை ஏற்படுத்தியது” எனக் கூறியுள்ளார் .

மேலும் படிக்க