• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனிக்கு நிகராக வேறு ஒருவர் வீரர் இல்லை – ரவி சாஸ்திரி புகழாரம்

May 21, 2019 தண்டோரா குழு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக் கோப்பை தொடர் மே 30-ம்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் எதிர்கொள்கிறது. விரோத் ஹோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்கிறது. இதற்கு முன்பாக கேப்டன் கோலி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் விராட் கோலி ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ரவி சாஸ்திரி,

முழு திறமையையும் வெளிப்படுத்தி விட்டால் உலகக் கோப்பை நம் கைக்குதான் வரும். ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர் தோனி.அவருக்கு நிகராக வேறு ஒருவர் வீரர் இல்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரராக திகழ்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க