• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தந்தையானார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா

December 31, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோஹித் சர்மா. ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருந்து வருகிறார். ரோகித் – ரித்திக்கா தம்பதியருக்கு கடந்த டிசம்பர் 13, 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. சமீபத்தில் தனது மனைவி கருவுற்று இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். ரோகித்சர்மா தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ரோகித் ஷர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்து ரித்திக்கா ஞாயிறு அன்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தந்தையான மகிழ்ச்சியை கேட்ட ரோகித்சர்மா உற்சாகத்தில் மிதந்தார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் ரோகித்சர்மா இந்தியாவுக்கு புறப்படுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க