இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான வார்த்தைப்போர் முடிவுக்கு வருவதாக இல்லை.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.
ராஞ்சி டெஸ்டின் முதல் நாளில் பவுண்டரி தடுக்கும் முயற்சியில், இந்திய கேப்டன் கோலிக்கு வலது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் குத்தி குத்தி காட்டிக்கொண்டே இருக்க, காட்டமான கோலி, ஸ்மித்தை செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு வாங்கு வாங்கினார்.
தவிர, அப்போது இந்திய ஊடகங்கள் எப்போதும் கிரிக்கெட்டுக்கு முக்கியதுவம் அளிப்பதாகவும், ஆஸ்திரேலிலிய ஊடகங்கள் எப்போதும் சர்ச்சைப்பற்றியே கேள்வி எழுப்புவதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் காண்டான ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று, விளையாட்டு உலகின் டொனால்டு டிரம்ப் கோலி என செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை போலவே கோலி எதற்கு எடுத்தாலும், ஊடங்களை குறை சொல்வதாகவும், அதன் மூலம் தன் மீதுள்ள குறையை மறைக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் படுமோசமான செயல்களை மறைக்க, கோலி மீது குறை சொல்லி ஆஸி., வீரர்களுக்கு அந்நாட்டு ஊடகங்கள் ஆதரவு அளித்துவருகிறது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது