• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காயத்திலிருந்து மீண்டு உலகக்கோப்பைக்கு ரெடியான கேதார் ஜாதவ்

May 18, 2019 தண்டோரா குழு

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீண்டதை தொடர்ந்து உலகக் கோப்பையில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவின் பெயரும் இடம்பெற்றது. இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய கேதார் ஜாதவிற்கு போட்டியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் அவரின் தோள்பட்டை காயம் குணமடைந்துவிட்டதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இதனால் அவர் உலககோப்பையில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க