• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கத்தார் சேட்டையால் உலகக் கோப்பைக்கு வந்த வினை!

June 8, 2017 tamilsamayam.com

வரும் 2022ல் கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுதும் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா தீவிரவாத அமைப்புகள் பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இந்நிலையில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறி, கத்தார் நாட்டுடன் தங்கள் உறவை முடித்துக் கொள்வதாக சவுதி, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இதையடுத்து கத்தார் நாட்டுடன் தரை, கடல், வான்வழி தொடர்பை துண்டிக்க சவுதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் கத்தாரும் இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது. அதனால், இந்த விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் வரும் 2022ல், கால்பந்து உலகக்கோப்பையை நடத்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) கத்தாரை தேர்வு செய்துள்ளது.

ஆனால், தற்போதைய நிலையில், இந்த பிரச்சனை காரணமாக, போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது நிலைமையை சரி செய்ய வேண்டிய நிலையில் பிபா மாட்டிக்கொண்டுள்ளது. இதனால், 2022 உலகக்கோப்பை தொடர் நடப்பதில் சிக்கல் நிலவுகிறது.

மேலும் படிக்க