April 7, 2017 tamilsamayam.com
பிரபலங்கள் என்றால், அவர் எங்கு சென்றாலும் அவர்களது ரசிகர்கள் கூடுவது வழக்கம். அதோடு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், அவரிடம் ஆட்டோகிராப் பெற அலைமோதுவதும் வழக்கம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை சுற்றியும் ரசிகர் கூட்டம் கூடுவது வழக்கமாகி வருகிறது.
அண்மையில் கோலி விமானத்தில் பயணித்தபின், விமானத்தை விட்டு இறங்குவதற்கு தயாரான போது, அந்த விமானத்தின் பணிப்பெண்கள் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். எடுத்துக்கொள்ளலாமா என கேட்டனர்.
அதற்கு கோலி எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல், உடனே எடுத்துக்கொள்வோமே என அனைவரும் சிரித்தப்படி குழுபடம் எடுத்துக்கொண்டனர். கோலியுடன் படம் எடுத்துக்கொண்டது நினைத்து பணிப்பெண்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.