• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

February 16, 2021 தண்டோரா குழு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 161 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் 134 ரன்னில் சுருண்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் இந்திய அணியின் அக்சர் படேல் – 5, அஷ்வின் – 3, குல்தீப் யாதவ் – 2 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் படிக்க