• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸியை வீழ்த்தி நம்பர் 1 என்பதை நிரூபித்த இந்தியா!

March 7, 2017 tamilsamayam.com

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் எழுச்சி பெற்றதால் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது நம்பர் 1 அணி என்பதை நிரூபித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. 2 நாட்கள் உள்ள நிலையில் மிக நிதானமாக விளையாட தொடங்கிய ஆஸி, இந்திய அணி சூழல் மற்றும் வேக பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரரகளான வார்னர் 17, மிச்செல் மார்ஸ் 13, வேட் 0, ஸ்டார்க் 1, லியோன் 2 ரன்னில் அஸ்வினின் அசத்தல் பந்தில் அவுட்டாகி வெளியேறினர்.உமேஷ் யாதவின் வேகத்தில் ஸ்மித் 28, சான் மார்ஸ் 9 ரன்களில் வெளியேறினர்.தொடக்க வீரர் ரென்சாவ் 5 ரன் எடுத்த போது இசாந்த் பந்தில் அவுட்டானார். ஓ கெபி ஜடேஜா பந்தில் போல்டாகி பறிதாபமாக வெளியேறினார்.

188 ரன்கள் தான் இலக்கு என்ற மிகவும் இக்கட்டான நிலையில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 3 மணி நேரத்தில் 10விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி, 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நம்பர் 1 அணி என நிரூபித்துள்ளது.அஸ்வின் 2வது இன்னிங்சில் 41 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வெற்றியை உறுதி செய்தார்.

மேலும் படிக்க