• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக அனிமேசன் தினத்தை முன்னிட்டு கின்னஸ் முயற்சி

October 29, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் உலக அனிமேசன் தினத்தை முன்னிட்டு கின்னஸ் முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.

உலக அனிமேஷன் தினத்தை முன்னிட்டு கோவை பொள்ளாச்சி சாலை மயிலேரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வீடியோ கேம் விளையாட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தப்படும் ஜாய்ஸ்டிக் எனப்படும் மின் கருவி போன்ற வடிவத்தில் மாணவர் கின்னஸ் சாதனை முயற்சியினை மேற்கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 387மாணவர்கள் கலந்து கொண்டு ஜாய்ஸ்டிக் வடிவத்தில் நின்று இந்த முயற்சியினை மேற்கொண்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது உலக அனிமேசன் தினத்தை முன்னிட்டு இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்,கடந்த 2013ம் ஆண்டு சீனாவை சேர்ந்த சோனி நிறுவனம் 259 பேர்களை கொண்டு ஹாங்காங்கில் உருவாக்கிய சாதனையை,387 பேர்களை கொண்டு செய்துள்ளோம் என தெரிவித்தனர். மேலும் இந்த முயற்சியானது கின்னஸ் புத்தக நிறுவனத்திற்கு அனுப்பபட்டுள்ளது முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் இந்த முயற்சி இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க