• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேற்கு வங்கத்தில் பெட்ரோல்,டீசல் விலை ரூ.1 குறைப்பு!- முதல்வர் மம்தா பானர்ஜி

September 11, 2018 தண்டோரா குழு

மேற்கு வங்கத்தில் பெட்ரோல்,டீசல் விலையில் தலா ரூ.1 குறைக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.வரலாறு காண அளவில் உயர்ந்துள்ள இந்த பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பொது மக்கள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,இந்த விலை உயர்வுக்கு எதிராக,எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில்,ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைத்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து, தற்போது மேற்கு வங்காள மாநில அரசும் விலை குறைப்பை அறிவித்துள்ளது.அம்மாநிலத்தில் பெட்ரோல்,டீசல் மீதான விலையில் ரூ.1 குறைக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க