• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரான்ஸ் போலீஸ் விசாரணைக்காக காத்திருப்பேன் – தமிழச்சி

September 30, 2016 தண்டோரா குழு

முதல்வர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட தமிழச்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இதற்காக பிரான்ஸ் போலீஸ் விசாரணைக்காக காத்திருப்பேன் என தமிழச்சி கூறியுள்ளார்.

முதலமைச்சர் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் நேற்று முகநூலில் தமிழச்சி என்ற பெண், முதல்வர் இறந்துவிட்டதாக அவதூறு செய்தி வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, முதல்வர் குறித்து தவறாக அவதூறு பரப்பியதால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தமிழச்சி மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழச்சி,

சென்னை போலீஸ் என் மீது வழக்கு பதிவு செய்ததை வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் போலீஸ் விசாரணைக்காக காத்திருப்பேன். உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை கருதுகிறேன் என முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க