• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அமராவதி ஆற்றின் கரையோர பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

August 16, 2018 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து மொத்தமுள்ள 90 அடியில் 88 அடிவரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்ததால் இன்று காலை வினாடிக்கு 30000கன அடியாக வந்துக்கொண்டிருந்த நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து தற்போது மிக அதிகமாக 35000கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.இதனால் பாதுகாப்புகருதி அணையிலிருந்து 35000 கன அடிநீரும் உபரிநீராக வெளியேற்றபட்டு வருகிறது.

இந்நிலையில் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றபட்டு வரும் சூழலில் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிமக்கள் ஆற்றுப்பகுதியில் இறங்கவோ கால்நடைகளை கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்,வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 அழைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க