• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

January 31, 2017 தண்டோரா குழு

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமித்வராய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்று கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

”அதேசமயம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழகத்தில் நடத்த வன்முறை ஏன் கட்டுக்குள் வைக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கை தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பல்வேறு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. இவற்றில் கூபா என்ற விலங்குகள நல அமைப்பின் மனுவும் ஒன்று.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ” தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான கூபா அமைப்பின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஜல்லிக்கட்டு சட்டத்தை விலங்குகள் நல வாரியத்திடம் எதிர்ப்பது ஏன் ” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் 6 மாத காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு வெளியி்ட்ட அறிவிக்கையை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க